படம் : உழவன்
பாடல் துவக்கம் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் : S.P.பாலசுப்ரமனியம்
பாடல்
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ ,
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ,
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ ,
சிரிப்பு மல்லிகை பூ ….
(பெண்ணல்ல பெண்ணல்ல …)
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ ,
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ ,
மை விழி ஜாடைகள் முல்லை பூ ,
மணக்கும் சந்தன பூ ,
சித்திர மேனி தாழம் பூ ,
சேலை அணியும் ஜாதி பூ ,
சிற்றிடை மீது வாழை பூ ,
ஜொலிக்கும் ஷென்பக பூ …
(பெண்ணல்ல பெண்ணல்ல …)
தென்றலை போல நடப்பவள் ,
என்னை தழுவ காத்து கிடப்பவள் ,
செந்தமிழ் நாட்டு திருமகள் ,
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் ,
சிந்தையில் தாவும் பூங்கிளி ,
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி ,
அஞ்சுகம் போல இருப்பவள் ,
கொட்டும் அருவி போல சிரிப்பவள் ,
மெல்லிய தாமரை காலெடுத்து ,
நடையை பழகும் பூன்தேறு ,
மேட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி …
(பெண்ணல்ல பெண்ணல்ல …)
சித்திரை மாத நிலவொளி ,
அவள் சில்லென தீண்டும் பனி துளி ,
கொஞ்சிடும் பாத கொலுசுகள் ,
அவை கொட்டிடும் காதல் முரசுகள் ,
பழத்தை போல இருப்பவள் ,
வெல்ல பாகை போல இனிப்பவல் ,
சின்ன மை விழி மெல்ல திறப்பவல் ,
அதில் மன்மத ராகம் படிப்பவள் ,
உச்சியில் வாசனை பூ முடித்து ,
உலவும் அழகு பூந்தோட்டம் ,
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் …
(பெண்ணல்ல பெண்ணல்ல …)