படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடல் துவக்கம் : பொன் ஒன்று கண்டேன் …
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ் ,T.M.சௌந்தரராஜன்
பாடல்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை,
ஏனென்று நான் சொல்லலாகுமா,
ஏனென்று நான் சொல்லவேண்டுமா …
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை,
ஏனென்று நான் சொல்லலாகுமா,
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா …
நடமாடும் மேகம் நவனாகரீகம் ,
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும் …
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்,
பழங்கால சின்னம் உயிராக மின்னும் …
துள்ளி வரும் வெள்ளி நிலா,
துள்ளி வரும் வெள்ளி நிலா …
துவண்டு விழும் கொடி இடையாள் ,
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ …
சென்றேன் ஹ்ம்ம்ம் ,
கண்டேன் ஹ்ம்ம்ம் ,
வந்தேன் …
(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை )
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை ,
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை …
உன் பார்வை போலே என் பார்வை இல்லை ,
நான் கண்ட கட்சி நீ காண வில்லை …
என் விழியில் நீ இருந்தாய் …
உன் வடிவில் நான் இருந்தேன் …
நீ இன்றி நான் இல்லை ,
நான் இன்றி நீ இல்லையே …
(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை )
ravies.p கூறியது:
on ஏப்ரல் 6, 2009 at 1:48 மு.பகல்
ithu mikavum pidiththamaana paadal,
kaathal vilai mathikka mudiyaatha onru penn pennaaka irukkumvarai.