இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…

உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,
ஏன், தமிழை விரும்புவருக்கும் ,
தமிழைக்கண்டு வியப்பவருக்கும்,
எல்லோருக்கும் , என் உளம் கனிந்த
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …

இந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி  புது வருடமாம் “விரோதி” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடம் அனைவருக்கும் “அன்பு, அமைதி, அரண்” ஆகிய மூன்றும் தடையின்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்..

மாரி மழை பெய்யாதோ …

படம் : உழவன் (1993)
பாடல் துவக்கம் : மாரி  மழை  பெய்யாதோ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது

கவள தண்ணி …
இறக்கு  மச்சான் …
ஏற  பூட்டி …
உழுது  வச்சான் …
வித்து  நெல்ல  எடுத்து  வச்சான்
விதைக்க நாளும்  காத்திருந்தான்

மாரி  மழை  பெய்யாதோ …
மக்கள்  பஞ்சம்  தீராதோ

மாரி  மழை  பெய்யாதோ
மக்கள்  பஞ்சம்  தீர
சாரல்  மழை  பெய்யாதோ
சனங்க  பஞ்சம்  மாற
மயில்கள்  ஆடும்  கொண்டாட்டம்  போடும்
வானம்  கருக்கலையே
குயில்கள்  நாளும்  தெம்மாங்கு  பாடும்
சோலைதான்  இங்கில்லையே
(மாரி  மழை …)

சட்டியில  மாக்கரச்சு
சந்தியில  கோலமிட்டு
கோலம்  அழியும்  வரை
கோடை  மழை  பெய்யாதோ
மானத்து  ராசாவே
மழை  விரும்பும்  புண்ணியரே
சன்னல்  ஒழுவாதோ
சாரல்  மழை  பெய்யாதோ

வடக்கே  மழை  பெய்ய
வரும்  கிழக்கே  வெள்ளம்
கொளத்தாங்  கரையிலே  அயிரை  துள்ளும்
கிழக்கே  மழை  பெய்ய

கிணறெல்லாம்  புது  வெள்ளம்
பச்சை  வயக்காடு  நெஞ்சை  கிள்ளும்
நல்ல  நெல்லு  கதிரறுத்து
புள்ள  நெளி  நெலியா  கட்டு  கட்டி
அவ  கட்டு  கட்டி  போகையிலே
நின்னு  கண்ணடிப்பான்  அத்தை  மகன்
உழவன்  சிரிக்கணும்  உலகம்  செழிக்கனும்
மின்னல்  இங்கு  பட   படக்க
(மாரி  மழை …)

வரப்புல  பொண்ணிருக்கு
பொண்ணு  கையில்  கிளி  இருக்கு
கிளி  இருக்கும்  கையா  நீ  எப்போ  புடிப்பா

வெதைஎல்லாம் செடியாகி
செடியெல்லாம்  காயாகி
காய  வித்து  உன்  கையா  புடிப்பேன்

புது  தண்டட்டி  போட்ட  புள்ள
சும்மா  தலதலன்னு  வளந்த  புள்ள

ராத்தவலையெல்லாம் குலவை  இட
நான்  தாமரை   உன்  மடி   மேல

கனவுகள்   பலிக்கணும்
கழனியும்  செழிக்கனும்
வானம்  கரு  கருக்க
(மாரி  மழை …)

கண்களில் என்ன ஈரமோ

படம் : உழவன் (1993)
பாடல் துவக்கம் : கண்களில்  என்ன  ஈரமோ ? …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் :சித்ரா, S.P.பாலசுப்ரமனியம்

பாடல்

கண்களில்  என்ன  ஈரமோ ?
நெஞ்சினில்  என்ன  பாரமோ ?
கைகளில்  அதை  வாங்கவா ?
ஒரு  தாயை  போல  உன்னை  தாங்கவா ?

(கண்களில்  என்ன  ஈரமோ …)

பெற்றவள்  விட்டு  போகலாம்
அன்னை  பூமியும்  விட்டு  போகுமா ?
தன்னுயிர்  போல  காப்பதில்
தாயும்  நிலவும்  ஒன்றுதான்
இருக்கும்  தாயை  காத்திடு
மயக்கம்  தீர்ந்து  வாழ்ந்திடு
புது  கோலம்  போடு
விழி  வாசலில்  கலக்கம்  ஏனையா ?

(கண்களில்  என்ன  ஈரமோ …)

அம்மம்மா  இன்று  மாறினேன்
அன்புக்கு  நன்றி  கூறினேன்
உள்ளத்தின்  காயம்  ஆறவே
உதவியது  உன்  வார்த்தை  தான்
நிம்மதி  இன்றி  வாடினேன்
நின்றிட  நிழல்  தேடினேன்
திக்கற்று  போன  வேளையில்
தெரிந்தது  என்  பாதைகள்
உனது  பாடல்  கேட்டது
மனதில்  பாலை  வார்த்தது
புயல்  காற்றில்  வாடி  நின்ற  ஓடம்  தான்
கரையை  சேர்ந்தது …

கண்களில்  இல்லை  ஈரமே
நெஞ்சினில்  இல்லை  பாரமே
கைகளில்  அதை  வாங்கினாய்
ஒரு  தாயை  போல  என்னை  தாங்கினாய்

(கண்களில்  இல்லை  ஈரமே …)

உன் பார்வையில் …..

படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் துவக்கம் : உன் பார்வையில் ஓராயிரம் …
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடியவர் :சித்ரா, KJ யேசுதாஸ்

பாடல்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

(உன் பார்வையில் ….. )

அசைந்து இசைத்தது வலைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வளம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிளிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து … பிறந்து … பறந்து … தினம் மகிழ…

(உன் பார்வையில் …)

அனைத்து  நனைந்தது  தலையனைதான்
அடுத்த  அடியென்ன  எடுப்பது  நான்
படுக்கை  விரித்து  உனக்கெனத்தான்
இடுப்பை  வளைத்துனை   அனைத்திடத்தான்
நினைக்க  மறந்தாய்  தனித்துப்  பறந்தேன்
நினைக்க  மறந்தாய்  தனித்துப்  பறந்தேன்
மறைத்த  முகத்திரை  திறப்பாயோ
திறந்து  அகத்திரை   இருப்பாயோ
இருந்து  … விருந்து  … இரண்டு  … மனம்  இணைய

(உன் பார்வையில் …)

இதுவரை நினைத்ததில்லை …

இதுவரை நினைத்ததில்லை …

இதுவரை தோன்றியதில்லை …
பூத்துக்குளுங்கும் மலர்களைவிட
சுற்றியிருக்கும் இலைகள் அழகென்று …

இதுவரை புரிந்ததில்லை …
கடற்கரை தென்றலைவிட
ஆளைத்தூக்கும் ஆடிக்காற்று சுகமென்று …

இதுவரை அறிந்ததில்லை …
நிலவொளி நிறைந்திருக்கும் பௌர்ணமியைவிட
நட்சத்திரங்கள் மட்டும் மின்னும் அம்மாவாசை கவர்ச்சியென்று …

இதுவரை கவணித்ததில்லை …
விலையுயர்ந்த வைரத்தைவிட
குழந்தையின் கண்கள் அதிகம் ஜொலிக்குமென்று …

இதுவரை நினைத்ததில்லை …
பொன்போன்ற காலத்தால்
என் கண்ணோட்டத்தை மாற்ற இயலுமென்று …

இதுவரை நினைத்ததில்லை …
பொன்போன்ற காலத்தால்
அவளைப்பற்றிய என் நினைப்பை மாற்ற இயலுமென்று …

எனக்கு பிடித்த பழைய பாடல்… – காலங்களில் அவள் வசந்தம்

படம் : பாவ மன்னிப்பு
பாடல் துவக்கம் : காலங்களில் அவள் வசந்தம் …
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்

பாடல்

காலங்களில் அவள் வசந்தம் ,
கலைகளிலே அவள் ஓவியம் ,
மாதங்களில் அவள் மார்கழி ,
மலர்களிலே அவள் மல்லிகை …

(காலங்களில் …)

பறவைகளில் அவள் மனிபுறா,
பாடல்களில் அவள் தாலாட்டு ,
கனிகளிலே அவள் மாங்கனி ,
காற்றினிலே அவள் தென்றல் …

(காலங்களில் …)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி ,
கண் போல் வளர்ப்பதில் அன்னை – அவள்
கவிஞன் ஆக்கினால் என்னை …

(காலங்களில் …)

எனக்கு பிடித்த பழைய பாடல்.. – பொன் ஒன்று கண்டேன்

படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடல் துவக்கம் : பொன் ஒன்று கண்டேன் …
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ் ,T.M.சௌந்தரராஜன்

பாடல்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை,
ஏனென்று நான் சொல்லலாகுமா,
ஏனென்று நான் சொல்லவேண்டுமா …
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை,
ஏனென்று நான் சொல்லலாகுமா,
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா …

நடமாடும் மேகம் நவனாகரீகம் ,
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும் …
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்,
பழங்கால சின்னம் உயிராக மின்னும் …
துள்ளி வரும் வெள்ளி நிலா,
துள்ளி வரும் வெள்ளி நிலா …
துவண்டு விழும் கொடி இடையாள் ,
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ …
சென்றேன் ஹ்ம்ம்ம் ,
கண்டேன் ஹ்ம்ம்ம் ,
வந்தேன் …

(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை )

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை ,
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை …
உன் பார்வை போலே என் பார்வை இல்லை ,
நான் கண்ட கட்சி நீ காண வில்லை …
என் விழியில் நீ இருந்தாய் …
உன் வடிவில் நான் இருந்தேன் …
நீ இன்றி நான் இல்லை ,
நான் இன்றி நீ இல்லையே …

(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை )

எனக்கு பிடித்த பாடல் – பெண்ணல்ல பெண்ணல்ல …

படம் : உழவன்
பாடல் துவக்கம் : பெண்ணல்ல  பெண்ணல்ல  ஊதா பூ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் : S.P.பாலசுப்ரமனியம்

பாடல்

பெண்ணல்ல  பெண்ணல்ல  ஊதா  பூ ,
சிவந்த  கண்ணங்கள் ரோசாப்பூ,
கண்ணல்ல  கண்ணல்ல  அல்லி  பூ ,
சிரிப்பு  மல்லிகை  பூ ….
(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

சிறு  கைவளை  கொஞ்சிடும்  கொய்யா பூ ,
அவள்  கைவிரல்  ஒவ்வொன்றும்  பன்னீர்  பூ ,
மை  விழி  ஜாடைகள்  முல்லை  பூ ,
மணக்கும்  சந்தன  பூ ,
சித்திர  மேனி  தாழம்  பூ ,
சேலை  அணியும்  ஜாதி  பூ ,
சிற்றிடை  மீது  வாழை  பூ ,
ஜொலிக்கும்  ஷென்பக  பூ …

(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

தென்றலை  போல  நடப்பவள் ,
என்னை  தழுவ  காத்து  கிடப்பவள் ,
செந்தமிழ்  நாட்டு  திருமகள் ,
எந்தன்  தாய்க்கு  வாய்த்த  மருமகள் ,
சிந்தையில்  தாவும்  பூங்கிளி ,
அவள்  சொல்லிடும்  வார்த்தை  தேன்துளி ,
அஞ்சுகம்  போல  இருப்பவள் ,
கொட்டும்  அருவி  போல  சிரிப்பவள் ,
மெல்லிய  தாமரை  காலெடுத்து ,
நடையை பழகும்  பூன்தேறு ,
மேட்டியை  காலில்  நான்  மாட்ட  மயங்கும்  பூங்கொடி …

(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

சித்திரை  மாத  நிலவொளி ,
அவள்  சில்லென  தீண்டும்  பனி  துளி ,
கொஞ்சிடும்  பாத  கொலுசுகள் ,
அவை  கொட்டிடும்  காதல்  முரசுகள் ,
பழத்தை  போல  இருப்பவள் ,
வெல்ல  பாகை போல  இனிப்பவல் ,
சின்ன  மை  விழி  மெல்ல  திறப்பவல் ,
அதில்  மன்மத  ராகம்  படிப்பவள் ,
உச்சியில்  வாசனை  பூ  முடித்து ,
உலவும்  அழகு  பூந்தோட்டம் ,
மெத்தையில்  நானும்  சீராட்ட  பிறந்த  மோகனம் …

(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

எனக்கு பிடித்த பழைய பாடல்…..

படம் : அன்னை
பாடல் துவக்கம் : புத்தி உள்ள மனிதரெல்லாம்….
இசையமைப்பாளர் : R. சுதர்சனம்
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : சந்திரபாபு

பாடல்:

புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை… புத்திசாலி இல்லை…
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை… புத்திசாலி இல்லை…

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை,
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை,
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்,
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்……..
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை…புத்திசாலி இல்லை…

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை,
காதல் கொண்ட அனைவருமே மணம்  முடிப்பதில்லை,
மணம்  முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை,
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை…
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை…புத்திசாலி இல்லை…

கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு,
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு,
அவன் கனவில் அவள் வருவாள் அவளை பார்த்து சிரிப்பான்,
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்…
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை…புத்திசாலி இல்லை…

ஆதி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

வண்ணங்களின் பண்டிகையான இன்று , என் வண்ணமிகு எண்ணங்களை , தாய் மொழியான தமிழ் மொழியில் பொறிக்க எண்ணி, இந்த வலைப்பதிவை (blog) துவக்கியுள்ளேன்… தங்கள் வாழ்த்துக்களுடன்…

என்றும் அன்புடன்,
செந்தில் குமார்.சி.